Thursday 5 March 2015

புரட்சி வேளாண்மை 1

வினவின் ஒரு பதிவில் நடக்கும் விவாதத்தில் இடப்பட்ட பின்னூட்டம் இது

இப்பின்னூட்டம் கீழேயுள்ள சுட்டியில் இருக்கிறது.

http://www.vinavu.com/2015/02/02/north-indian-workers-as-modern-bonded-labour-in-ranipet/#comment-394772

///
வாசகர்களுக்கு,

விவாதம் விவசாயத்தின் பக்கம் நகர்ந்திருக்கிறது. பரவாயில்லை.

எனது கருத்துக்கள் சில:

1. சாண மற்றும் தளை எருவுக்கு மாற்று இல்லவே இல்லை. இதை வண்டிவண்டியாக நாம் செலாவனி கொடுத்து வாங்கவில்லை. இது நமது கொல்லையிலேயே சேகரமானது. நெல்லுக்கு இன்றும் தளையையும் போடுகிறார்கள். சாணத்துடன் வைக்கோல் சோளத் தட்டை கழிவுகளை போட்டு எருவாக்கியது தான் எல்லாவகையிலும் சிறந்த உரம்.
2. பாசன வசதிகள் வளர்ச்சிக்கு தகுந்தவாறு கால்நடையும் அதன் எருவும் பெருகியிருக்கும். எனவே இதைவைத்தே நாம் நன்றாக விவசாயம் செய்திருக்க முடியும்.
3. முன்னர் எருவாக ஏரி மேல்மண்ணும் பயன்படுத்தப்பட்டது. ஏரிகளில் வேல மரங்களை நட்டும், அதைக் காப்பதாக சொல்லியும் மண் எடுப்பதை தடுத்தனர். இது உரக்கம்பெனிகள் பிழைக்கவேண்டி செய்யப்பட்டது என்பதில் உன்மையில்லாமல் இல்லை.
4. இலை தளைகளுடன் சிறிதளவு சாணத்தை சேரத்து எரு உருவாக்குவது ஒரளவுக்கு புதிய முறைதான். இதை பெரிய அளவில் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி பயன்படுத்தி வேதியல் உரங்களைப் பயன்படுத்தாமல் தவிர்த்திருக்கலாம். வேளான் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையங்கள் அரசு அதிகாரிகள் இதை செய்யத் தவறிவிட்டார்கள். உரங்களின் பூச்சிக்கொல்லிகளின் விற்பனையால் நிறைய மக்களுக்கு நிறைய ஊக்கத்தொகை கிடைத்ததால் காசில்லா வழிமுறைகள் பரவலாக்கப்படவில்லை. பல வேளாண் அறிஞர்கள் அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களுக்கு ஆராய்ச்சி நிலையங்களுக்கு scholarship கொடுத்து வரவழைக்கப்பட்டனர். இவர்கள் இயற்கையைப்பற்றி அக்கறைப்பட்டால் அவர்கள் கவனிப்பு இல்லாமல் போயிருக்கலாம்.
5. மனிதனின் தனியுடமை பேராசை தான் இதற்கெல்லாம் காரணம். விஞ்ஞானிகள், விவசாய ‘வல்லுனர்கள்’ தொடங்கி விவசாயி வரை இதில் பங்கு இருக்கிறது. பூச்சிகளைக் கொல்லக்கூடிய கொடிய விசங்களால் நமக்கு ஏதும் நடந்து விடாது என்று எண்ணுவது எவ்வளவு அசட்டுத்தனம்.
6. அமேரிக்காவின் அளவுக்கு விச ரசாயணங்கள் ரஸ்யாவில் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் யார் செய்தாலும் தவறுதான். அதே சமயம் போட்டி போடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு எடுத்துச் சென்றவர்களுக்கு இந்த குற்றத்தில் அதிக பங்கு இருக்கிறது.
7. அப்போது பின்விளைவுகளைப் பற்றி யோசிக்கவில்லை என்றாலும் ஆரம்ப கட்டம் என்பதால் அது பெரிய தவறில்லை. ஆனால் இன்னும் அதே பாதையில் தான் சென்று கொணடிருக்கிறோம். இன்றே நமது திசையைத் திருப்பிக் கொள்வதே முன்னெச்சரிக்கையானது. சிலர் யூகிப்பதைப் போன்று, தாமிரத்தை மறுசுழற்சி செய்து விடலாம். மின்சாரத்தை வைத்து அதை சாதாரண மண்ணிலிருந்து கூட பிரித்தெடுத்துவிடலாம். ஆனால் இவ்வாறு எத்தனை பொருள்களை மீட்க முடியும். பாழாகிய மண்ணை நிலத்தடி நீரை எவ்வளவு விலை கொடுத்து எந்த நுட்பத்தை வைத்து சரிசெய்யமுடியும்? இதற்கு எவ்வளவு செலவு ஆகும். யார் ஏற்பார்கள். நம் எல்லோருக்கும் நீரை, உணவை எப்படி பெறுவது?
///

ஜீவகாருண்யம்

வாசகர்களுக்கு,

எருமை பசு ஆடு பன்றி கழுதை குதிரை ஒட்டகம் லாமா போன்ற கால்நடைகள் நமது துணைவர்கள். பால் இறைச்சி சாணம் தோல் கம்பளி போன்று பல வழிகளில் அவற்றால் நாம் பயனடைகிறோம்.

நமது உணவு உற்பத்தியில் சாணம் மற்றும் அது சார்ந்த எருவின் பங்கு முதன்மையானது. இன்று விவசாயத்தை ரசாயன உரங்களற்ற இயற்கையான ஒன்றாக மாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எருவின் பயனை முடிந்த வரை அதிகரிப்பது நலம். இதற்கு கால்நடைகள் நீண்ட காலத்திற்கு காப்பாற்றப்படுவது நல்லது. எருமை பசு பன்றி போன்ற கால்நடைகள் நமது உணவுக் கழிவுகளை (கஞ்சி, காய்கணி கழிவுகள் முதலியவை) உண்டு நமக்கு சாணமாக தரக்கூடியவை.

நகரங்களின் உணவுக் கழிவுகள் வீதியின் கால்வாய்களில் தான் கொட்டப்படுகிறது. (இதன் தீங்குகளைப் பற்றி தனியாக விளக்க வேண்டும்.) பதிலாக ஒவ்வொரு வீதியிலும், பகுதியிலும் கால்நடை வளர்ப்பு மையங்கள் நடத்தப்படவேண்டும். இறைச்சி உணவுக்கழிவுகள் பன்றிகளுக்கும் மற்றவை எருமை பசு போன்றவைகளுக்கும் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் காலி இடங்கள் இதற்காகவும் கால்நடைகளுக்கு தீவனம் வளர்க்கவும் பயன்படுத்தப்படவேண்டும்.

இந்த மையங்களில் வளர்க்கப்படும் ஆண் பெண் கால்நடைகள் அதன் கடைசி மூச்சு வரை காப்பாற்ற படுவது நலம். (தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக சில மிகவும் வயதான விலங்குகளை அதன் கடைசி மூச்சிற்கு முன்னதாகக்கூட கசாப்பு செய்து விடலாம்) இதனால் நமக்கு சாணம் என்ற உயரிய எருவின் தேவை தொடர்ந்து பூர்த்தி செய்யப்படும். இந்த சாணம் வயலில் பயன்படுவதற்கு முன்பு எரிவாயு தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்த எரிவாயு அப்பகுதியின் பொது உணவகத்தை நடத்த உதவும்.

இந்த மையங்களில் இறந்த மாடுகளின் இறைச்சியை விருப்பமுள்ளவர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஜீவகாருண்யத்தினால் இறைச்சியை உண்ணாமல் இருப்பவர்கள் இந்த இறைச்சியை ஏற்றுக் கொள்வது நலம். மற்றவர்களும் இந்த ஜீவகாருண்யத்தை ஏற்றுக்கொள்வதை இது ஏதுவாக்கும். இதன் மூலம் இந்த விலங்குகளின் இனிய வாழ்க்கையை உத்திரவாதப்படுத்த முடியும். அதுவும் இதற்கென்று எந்த சட்டங்களும் தேவையில்லாமலேயே.

நாம் இயற்கையில் அதாவது புதர் மறைவில் மலம் கழித்ததை நிறுத்தியதிலிருந்து நமது கழிவுகளும் மறுசுழற்சியில்லாமல் நமது வீடுகளுக்கடியில் மாட்டிக்கொண்டிருக்கிறது. இது கால்நடைகளுக்கு பச்சைத் தீவனம் வளர்க்க பயன்படுத்தவேண்டும். இதன் மூலம் கால்நடைகளின் தீவனத்தை உறுதிப்படுத்த முடியும்.

இது போன்ற பாரிய மாற்றங்கள் பொதுநல பொதுவுடமை சமூகத்தில் தான் சாத்தியம் என்பதும் புரிந்து கொள்வது கடினமானதல்ல.

இந்த பொது மையங்களுக்கும் கூடுதலாக எருமை பசு பன்றிகள் அவற்றிற்கு நீண்ட ஆயுட்காலம் அளிக்கும் விதத்தில் வளர்க்கப்பட்டு பயன்படுத்தப்படலாம். மற்ற விலங்குகள் அதாவது ஆடுகள் கோழிகள் போன்றவை பொதுவிலோ, தனியாகவோ முடிந்தவரை இயற்கையாக வளர்க்கப்பட்டு கிட்டத்தட்ட இப்போது உள்ளதைப் போலவே பயன்படுத்தப்படலாம்.

மேலேயுள்ள ஒன்றுமே புதியதில்லை. எல்லாமே இயற்கையில் முன்னர் இருந்த சமநிலைதான். சிந்திப்போம். செயல்படுவோம். நம்மையும் நம் துணைவர்களையும் காத்துக்கொள்வோம்.